சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.