பிரம்மதேசம் அடுத்த முருக்கேரியில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.