ராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வெளி நோயாளிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆஸ்பத்திரியில் கூடுதலாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.