தென்தாமரைகுளத்தில் இருந்து கீழமணக்குடிக்கு செல்லும் வெண்கலராஜன் கோட்டை சாலையில் உள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தின் அருகில் சிலர் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோனி மோசஸ், தென்தாமரைகுளம்.