கம்பம் அருகே அனுமந்தன்பட்டி குள்ளிகோனார் தெருவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பேவர் பிளாக் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும் பள்ளம் முறையாக மூடப்படவில்லை. அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்களும் மீண்டும் பதிக்கப்படவில்லை. இதன் காரணமக இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.