ஆண்டிப்பட்டி தாலுகா டி.அழகாபுரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் அந்த கழிப்பறை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே கழிப்பறையை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.