சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.