சங்கராபுரம் பகுதியில் பூட்டை மற்றும் பாண்டலம் கிராமங்களில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. ஆனால் தற்போது இவை இயங்காததால் அப்பகுதி விவசாயிகள் நீண்ட தூரத்தில் உள்ள சங்கராபுரத்திற்கு விளை பொருட்களை கொண்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் அதிகாரிக் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.