சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள இலவச கழிப்பிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிவறைக்கு வரும் பயணிகள் மூக்கை மூடிக்கொண்டு வருகின்றனர். சிலர் கழிவறை சரியில்லாததால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவறையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?