விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.