விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.