கம்பம் உழவர் சந்தையில் உள்ள கடைகள் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு காய்கறி மூட்டைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உழவர் சந்தைக்குள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை சுருங்கிவிட்டது. இதன் காரணமாக நெரிசலில் சிக்கித் தவித்தபடி காய்கறிகளை பொதுமக்கள் வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.