பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் சேகரிக்க பயன்படுத்தப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் சேதமடைந்தது. அதனை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்கவில்லை. இதனால் அந்த வாகனங்கள் அங்குள்ள சாலையோரம் துருப்பிடித்து வீணாகி வருகிறது. எனவே அந்த வாகனங்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.