பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக அங்கு வரும் முதியோர்கள், குழந்தையுடன் வரும் தாய்மார்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, முதியோர்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்படும் இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகளை அமைக்க வேண்டும்.
-பிரபானந்து, பெருவிளை.