உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது.இங்கு காலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே உடுமலை உழவர் சந்தைக்கு முன்பு நிலவுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.