கோபி அருகே மேவானி ஊராட்சியில் உள்ள மயானம் பகுதியில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றுக்கு செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.