மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 56 கிராமங்களிலும் நாளுக்கு நாள் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் கொசுமருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.