நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி இல்லை. இதனால் மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பஸ்சுக்காக தரையில் காத்திருந்து பயணிக்கும் அவலநிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.