குரங்குகள் தொல்லை

Update: 2025-01-05 16:50 GMT

திருச்சி 21-வது வார்டு நத்தர்ஷா பள்ளி வாசல், மதுரை ரோடு பகுதியில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்கள் எடுத்து செல்கின்றன. மேலும் பொதுமக்களை கடிக்க வருவதுபோல் பயமுறுத்துகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்