எப்போதும்வென்றான் அணையின் நீராதாரமான சிற்றாறு எனும் மலட்டாறு ஆதனூர், முள்ளூர், முத்துக்குமராபுரம், கல்மேடு உள்ளட்ட பகுதிகளின் வழியாக சென்று கடலில் கலக்கிறது. தற்போது மலட்டாற்றில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்ததால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.