சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. மேலும் மழை காலம் என்பதால் தேங்கிய மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் கொசுக்கடியால் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?