திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் தெருவில் வங்கியின் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதாக அல்பர்ட் என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.