தெருநாய் தொல்லை

Update: 2024-09-15 17:59 GMT

நாமகிரிப்பேட்டை திம்மநாயக்கன்பட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல பயப்படுகிறார்கள். வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோரை கடித்து விட்டன. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், திம்மநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்