ஆபத்தான மரம் அகற்றப்படுமா?

Update: 2024-09-15 17:42 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை நேதாஜி ரோட்டில் பசுல்லா நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பழமையான புளிய மரம் ஒன்று அந்த பகுதியில் உள்ள கடை மீது சாய்ந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இதனால் வேகமாக காற்று அடித்தால் கூட அந்த மரம் விழும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க சாய்ந்த நிலையில் உள்ள அந்த மரத்தை அகற்ற வேண்டும்.

ஷாஜகான், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்