கிடப்பில் மழைநீர் வடிகால்வாய் பணி

Update: 2024-09-01 15:01 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம் பூமாதேவி நகர் 3-வது வார்டு பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், அந்த பணி முடிவடையாமல் கடந்த 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையின் அருகில் மழைநீர் வடிகால்வாய் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மழைக்காலம் நெருங்குவதால் ஆபத்து ஏற்படும் முன்பு இந்த பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்