மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-09-01 14:49 GMT

சென்னை மடிப்பாக்கம் லட்சுமி நகர் 2-வது தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் தூர்வாடப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தடைபடுவதால் இதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளது. அதிக அளவு மக்கள் உள்ள பகுதி என்பதால், மழை காலங்களில் கனமழை பெய்தால் மழைநீர் வீடுகளுக்குள் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைகாலங்களுக்கு முன்பே மழைநீர் வடிகால்வாயை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்