அதிகாரிகளின் மெத்தனப்போக்கு

Update: 2024-09-01 14:48 GMT

சென்னை சூளைமேடு, ஆத்ரேயபுரம் 2-வது தெருவில் அதிக அளவு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கூவம் கால்வாய் ஒன்று உள்ளது. அந்த கூவம் கால்வாயின் தடுப்பு சுவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உடைந்து விழுந்தது. இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்தனர். ஆனால் இதுவரையில், அந்த கூவம் கால்வாயின் தடுப்பு சுவர் அமைக்காமல் அதிகாரிகள் தங்கள் மெத்தனபோக்கை கடைபிடித்து வருகின்றனர். அதிகஅளவு குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால், அசம்பாவிதம் எதும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்