தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-09-01 12:05 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே எட்டாம் மண்டகப்படியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் பழுதாகி எப்போது வேண்டுமானாலும் கீேழு விழும் நிலையில் இருந்தது. இதனால் புதிய மின்கம்பம் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரோலியாக மின்வாரிய அதிகாரிகள் பழுதான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து கொடுத்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கு அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்