பழுதடைந்த அரசு கட்டிடம்

Update: 2024-09-01 09:16 GMT

கோவையை அடுத்த சோமையம்பாளையம் அருகே கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இதன் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே விரிசல் அடைந்தும், உடைந்தும் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு இருக்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

ராம்கி, கஸ்தூரிநாயக்கன்பாளையம்.

மேலும் செய்திகள்