தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-08-25 12:50 GMT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், ஆதிதிராவிட காலனியில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிப்பு இன்றி சிதிலமடை காணப்படுவதனால் இதனை இப்பகுதி பெண்கள் பயன்படுத்தாமல் இருந்தனர். மேலும் இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சுகாதார நிலையத்தை சீர் செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி பெண்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்