ஆபத்தான பள்ளம்

Update: 2024-08-18 17:18 GMT

பர்கூர் தாலுகா அலுவலகம் அருகில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி உள்ளது. இதன் எதிரில் சாலையோரம் சுமார் 5 அடி ஆழமுள்ள பள்ளம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வந்து அங்கு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பள்ளத்தில் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி கழிவுநீர் தேங்கியுள்ள பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரகுபதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்