பள்ளிக்கூட மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Update: 2024-08-18 11:23 GMT

கோவையில் சைக்கிள் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கூடங்களுக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும்போது சாலையை தாறுமாறாக கடக்கின்றனர். இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அல்லது தேசிய மாணவர் படை மாணவர்களை கூட பயன்படுத்தலாம். இதன் மூலம் விபத்து அபாயம் குறையும். 

மேலும் செய்திகள்