விஷ ஜந்துகள் நடமாட்டம்

Update: 2024-08-11 11:57 GMT

கோவை மாநகராட்சி 42-வது வார்டு வேலாண்டிபாளையம் டாக்டர் அம்பேத்கர் ரோடு அண்ணா நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சத்துணவு மைய கூடம் உள்ளது. இதன் பின்புறத்தில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. அதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவே அச்சமாக உள்ளது. எனவே குழந்தைகளின் நலன் கருதி அங்க அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்