பேனர்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-08-04 17:52 GMT

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து நாகல்நகருக்கு செல்லும் சாலையில் மேம்பாலம் அருகே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்