பயனற்ற நிழற்கூடம்

Update: 2024-08-04 17:28 GMT

நாமகிரிப்பேட்டை தாலுகா மெட்டாலா அடுத்த உடையார்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவாயில் முன்பு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு அதில் கான்கிரீட் இருக்கை போடப்பட்டு இருந்தது. ஆனால் அமைக்கப்பட்ட இருக்கை தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் நின்றபடியே காத்திருந்து அவதியடைகின்றனர். மேலும் பயன்படுத்த முடியாமலும் சேதடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கவும், அந்த இருக்கையை புதுப்பித்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-தேவராஜ், உடையார்பாளையம்.

மேலும் செய்திகள்