விஷ ஜந்துகளின் புகலிடம்

Update: 2024-08-04 12:28 GMT

கோவை சிங்காநல்லூர் 58-வது வார்டு விவேகானந்தா நகர் பகுதியில் சாலையோரம் தனியாருக்கு சொந்தமான இடம் புதர் மண்டி கிடக்கிறது. அங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக விளங்குகிறது. இதனால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடிவது இல்லை. எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்றி சுத்தம் செய்ய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்