சீரமைக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2024-08-04 11:34 GMT

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் சுற்றுவட்டார பகுதி பெண்களின் நலன் கருதி சுகாதார கழிப்பிட வளாகம் கட்டப்பட்டது. அதை பல ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கழிவுநீர் குழாய் பழுதடைந்து கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் இருந்தது. இதன் காரணமாக சுகாதார வளாகத்தை பூட்டி விட்டனர். இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்