தூர்வாரப்படாத கால்வாய்

Update: 2024-08-04 11:34 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர், செட்டிதோட்டம், செல்வநகர் வழியாக முத்தனூர் பகுதியில் உள்ள புகளூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. இந்த உபரி நீர் கால்வாய் வழியாக விவசாயத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மழை காலங்களில் வெளியேறும் மழை நீரும் தங்கு தடை இன்றி செல்வதற்காக உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கால்வாய்க்குள் ஏராளமான சம்பு மற்றும் செடி, கொடிகள் முளைத்து தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்