சீரமைக்க வேண்டும்

Update: 2024-08-04 08:47 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெட்சுமிபுரம் காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இந்த மையத்தின் முகப்பு பகுதியில் ஒரு இடத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, சுவற்றில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மையத்துக்கு வரும் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் நலன்கருதி சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்