ேநாய் பரவும் அபாயம்

Update: 2024-07-28 12:03 GMT

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் வெற்றி வேலவாநகர் பகுதியில் ஆபத்தான கிணறு உள்ளது. இந்த கிணற்றை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கிணற்றை குப்பைகள் மற்றும் கழிவுகள் கொண்டு மூடப்படுகிறது. இதனால் அங்கு பயங்கரமான துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதேபோல் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்