குரங்குகளால் விபத்து அபாயம்

Update: 2024-07-21 17:55 GMT

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி முன்பாக மேலுமலை உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகள் அதிக அளவில் வருகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதியில் தாழ்வான சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. அந்த நேரம் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் குரங்கள் இருப்பதால், விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுமன், சூளகிரி.

மேலும் செய்திகள்