புதர்மண்டிய பாதை

Update: 2024-07-21 17:46 GMT

பர்கூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழிப்பாதை அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு கல் மற்றும் மண் கொட்டப்பட்டது. தற்போது கொட்டப்பட்ட மண்ணும், கல்லும் சேர்ந்து திட்டாக மாறி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மின்வாரியத்திற்கு வரும் ஊழியர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து புதர்மண்டி திட்டாக இருக்கும் மின்வாரிய அலுவலக வழியை சீரமைத்து தர வேண்டும்.

-மதன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்