கிடப்பில் போடப்பட்ட பாலப்பணி

Update: 2024-07-21 11:41 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கடைவீதியிலிருந்து பாலத்துறை செல்லும் வழியில் இடையில் உள்ள கண்டியாண்ணூரில் செல்லக்கூடிய கழிவு நீருக்கான வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்