புதர்மண்டிய ஆறு

Update: 2024-07-21 11:33 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு அருகே உள்ள அம்புலி ஆறு செல்லும் வழிகளில் புதர் செடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் ஆகியவை புதர் போல மண்டி கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும் சூழல் உள்ளதால் அம்புலி ஆற்று பகுதிகளில் வளர்ந்த நிற்கும் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்