நுழைவு வாயிலுக்கு கதவு

Update: 2024-07-14 18:11 GMT

கொல்லிமலை ஒன்றியம் சேலூர் நாடு ஊராட்சிக்குட்பட்ட வீரகனூர் பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நுழைவு வாயில் கதவு இன்றி திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அங்கு வரும் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் பள்ளியில் திருட்டு சம்பவம் எதுவும் நடைபெறும் முன் விரைந்து பள்ளியின் நுழைவு வாயிலுக்கு கதவு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரத், நாமக்கல்.

மேலும் செய்திகள்