அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி மையம்

Update: 2024-07-14 18:07 GMT

நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி ஊராட்சி கொல்லம்பட்டறை அருகில் கிராம சாவடி அங்கன்வாடி மையமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஊரின் நடுவே உள்ள இந்த அங்கன்வாடி மையம் அடிப்படை வசதிகள் எதும் இல்லாமல் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்க போதிய இட வசதி இல்லை. எனவே அதிகாரிகள் புதிய இடத்தில் அங்கன்வாடி மையத்தை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்