அங்கன்வாடியில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2024-07-14 13:06 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குள் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் புகுந்து அங்கு மதுகுடித்துவிட்டு காலி பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்திற்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே மதுப்பிரியர்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்