தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-07-14 11:05 GMT

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கரூர்-சேலம் செல்வதற்காக சாலையோரத்தில் பஸ் நிறுத்த நிழற்குடைகள் இருபுறமும் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை அகற்றப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்