குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2024-07-14 07:20 GMT

பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாலானி குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் பராமரிப்பின்றி செடி-கொடிகள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 


மேலும் செய்திகள்