தொலைவில் நூலகம்

Update: 2024-07-07 18:13 GMT

நாமகிரிப்பேட்டை நகர பகுதிகளில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் அரசு நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நூலகமானது தற்போது 3-வதாக புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நூலகம் நகரில் இருத்து தொலைவில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நகரின் மையப் பகுதியில் அரசு கட்டிடத்தில் நூலகத்தை அமைத்து தர வேண்டும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கதிர், நாமக்கல்.

மேலும் செய்திகள்